சூஃபி மகான்
இறை நிலை
விளக்கம்,,,,
சூஃபி மகான் ஒருவர் தனக்காக ஓர் அடிமையை விலைக்கு வாங்கினார்.
அன்றாட தேவைகளை அவன் கவனித்துக் கொண்டால் தாம் இறைவழிபாட்டில் மூழ்கி இருக்கலாமே என்ற எண்ணத்தால்.
அடிமையை வாங்கிக் கொண்டு அவர் வீட்டிற்கு வந்தார்.
அந்த அடிமையின் பணிவும் மாரியாதையும் அவருக்கு மிகவும் பிடித்து போயிற்று.
மெல்ல அவனிடம் பேச்சு கொடுத்தார்.
உன்னுடைய பெயரென்ன?
நீங்கள் என்னை எந்தப் பெயரைக் கொண்டும் அழைக்கலாம். அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது " என்றான் அடிமை.
நீ என்ன வேலை செய்வாய்?
தாங்கள் என்ன உத்தரவு அளிக்கின்றீரோ அதை செவ்வனே செய்து முடிப்பதே என்னுடைய கடமை" என்றான் அவன்.
நீ என்ன சாப்பிடுவாய்?
தாங்கள் என்ன தருகின்றீரோ அதை சாப்பிடுவேன்"
உனக்கு ஏதேனும் ஆசை இருக்கின்றதா?
எஜமானர் இருக்கும் போது அடிமைக்கு என்று ஒத ஆசை தனியாக இருக்க முடியுமா? தங்களுடைய நாட்டமே என் விருப்பம்" என்றான் அடிமை.
அவனுடைய அந்த தன்னடக்கமான பேச்சைக் கேட்டதும் சூஃபி மகானுக்கு அழுகையே வந்து விட்டது.
தனக்கும் இறைவனுக்கும் இருக்க வேண்டிய தொடர்பை எந்த அளவுக்கு மேன்மையாக விளக்கி விட்டான் இந்த அடிமை.
அன்பரே,, இறைவனுடன் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு கற்று கொடுத்து விட்டீர்கள்
இனி நீங்கள் அடிமை இல்லை. உங்கனை நான் விடுதலை செய்து விட்டேன்." என்று கூறி அடிமையை அனுப்பி வைத்துவிட்டார் சூஃபி அவர்கள்.
✿ பிடிச்சா கமண்ட் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
Translate
Thursday 28 December 2017
Subscribe to:
Post Comments (Atom)
வெற்றியை உருவாக்கும் எண்ணங்கள்
வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்குப் பிறகுதான் தலையெடுத்திருப்பார்கள். குறிப்பாக, முதல் முறையாகத் தொழில் செய்பவர்கள்...
-
ஆளுமை (Personality) என்பது என்ன? ஆளுமை என்பது என்ன என்பது பற்றி அறுதியான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை இல் லை. உளவியல் ந...
-
ஆழ்மன சக்தி பனிப்பாறை (iceberg) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டைட்டானிக் எனும் பெரியதொரு கப்பல் அதில் இடித்துக் கவிழ்ந்து போனதே? துருவ மண்...
-
நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் அதீத உள்ளுணர்வுத் திறன், கூடுதல் புலனறிவு, என பலவாறு அழைக்கப்படும் ESP. வியப்பைத் தருவதாகவும்...
No comments:
Post a Comment